சென்னை: முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட் தொடர்பாக விசாரணைக்கு பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடக்கும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழக அணி பங்கேற்காதது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.