திருப்பூர்: பிரதமர் மோடி வரும் 25ம் தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக பாஜ நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் நடைபயணம் நிறைவு விழா சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருந்தார். இந்நிலையில், நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கட்டாயம் பங்கேற்பார் என்றும், அவரது வருகையை உறுதி செய்த பின்னர் பொதுக்கூட்டம் மற்றும் நிறைவிழா தேதி அறிவிக்கப்படும் என்றும் பாஜ நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி வருகிற 25ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தர இருக்கிறார். அன்று மாதப்பூரில் நடைபெறுகிற நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருப்பதாக பாஜ நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி 25ம் தேதி மீண்டும் தமிழகம் வருகை: பல்லடம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
previous post