சென்னை: திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானதா? அல்லது அலுவல் ரீதியிலானதா? என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கட்டணம் செலுத்தாமல் அரசு வாகனங்களை எந்த சட்ட விதிகளின் கீழ் அவர் பயன்படுத்தினார் எனவும், பொது மக்களும் கோயில்களுக்குச் செல்ல இது போல அரசு வாகனங்களை பயன்படுத்த முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.