டெல்லி: உலகக்கோப்பை செஸ் போட்டியில் 2-ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை இல்லத்துக்கே அழைத்து பிரதமர் மோடி நேரில் பாராட்டு தெரிவித்தார். பிரதமரை சந்தித்தது மிகவும் பெருமிதத்திற்குரிய தருணம் என பிரக்ஞானந்தா எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.