Sunday, September 1, 2024
Home » எம்ஜிஆர், ஜெயலலிதா கலவையான எடப்பாடி ஆட்சியை சரியில்லை என்றாவது பிரதமர் கூறியிருக்கலாம்: திண்டுக்கல் உளறல் மன்னன் தமாசு

எம்ஜிஆர், ஜெயலலிதா கலவையான எடப்பாடி ஆட்சியை சரியில்லை என்றாவது பிரதமர் கூறியிருக்கலாம்: திண்டுக்கல் உளறல் மன்னன் தமாசு

by Ranjith

அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்ட மேடைகளில் பேசும்போது எதையாவது பேசி எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல; சொந்த கட்சியினரையே அதிர்ச்சியடைய செய்வார். இந்நிலையில், திண்டுக்கல் என்ஜிஓ காலனியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரட்டும். தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியை பாராட்டி உள்ளார். ஆனால், நான்கரை ஆண்டு காலம் ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமியை பாராட்டவில்லை. அவரை பாராட்டியிருந்தால் சரியான அளவுகோலாக இருந்திருக்கும்.

அல்லது அவரது ஆட்சி சரியில்லை என கூறியிருக்க வேண்டும். அதை மோடி செய்யவில்லை. ஆனால் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் எடப்பாடியாரை மோடி எப்படி எல்லாம் பாராட்டி உள்ளார் என்ற ஆதாரம் உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா கலவையாக உள்ள எடப்பாடி பழனிசாமியையும் மோடி பாராட்டியிருக்க வேண்டும், அப்படி பாராட்டாமல் இருந்தது ஏன் என்று தெரியவில்லை. இவ்வாறு பேசினார்.

You may also like

Leave a Comment

five × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi