சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள 500 மெகா வாட் திறன் கொண்ட பாவனி என்கிற அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைக்கிறார். இதையொட்டி சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி காட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.