டெல்லி : பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்துள்ளார் என்றும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தனிப்பட்ட முறையில் சென்று பரப்புரையிலும் மோடி ஈடுபட்டார் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.