சென்னை: விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். நெசவு செய்யும் வேட்டி, சேலைகளுக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற, கள்ளச்சந்தையில் சேலை விற்பனையை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியிருக்கிறார்.