பரிபதா(ஒடிசா): ஒடிசா மாநிலம் மகாராஜா ராமசந்திர பஞ்சதேயோ பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அவர் பேசி கொண்டிருந்தபோது திடீரென்று மின்தடை ஏற்பட்டது. இதனால் மைக் துண்டிக்கப்பட்டு, அரங்கம் இருளில் மூழ்கியது. அப்போது சக்தி ஔிந்து விளையாடுகிறது என திரவுபதி முர்மு தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து பல்கலைக் கழக துணைவேந்தர் சந்தோஷ் குமார் திரிவேதி வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டு கொண்டார்.
ஜனாதிபதி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் மின்தடை
previous post