Saturday, July 27, 2024
Home » நீலாங்கரையில் இன்று மாலை பொன்குமார் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகிறார்

நீலாங்கரையில் இன்று மாலை பொன்குமார் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகிறார்

by Francis

சென்னை: நீலாங்கரையில் இன்று மாலை நடக்கும் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவரும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான பொன்குமார்-மைதிலி தம்பதியின் மகள் கே.திவ்யா. பட்டதாரியான இவர், சென்னையில் பிஇ முடித்து லண்டனில் எம்எஸ் முடித்துள்ளார். மாங்காடு கிருஷ்ணன் கீதா தம்பதியின் மகன் ரஞ்சித்குமாரும் பட்டதாரி. கே.திவ்யா-ரஞ்சித்குமார் ஆகியோரின் திருமணம் நாளை காலை 9 மணிக்கு ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது.

திருமணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைப்பதாக ஒப்புதல் அளித்திருந்தார். இந்த நிலையில் சட்டமன்றம் நடைபெறுவதாலும் நாளை ஆளுநர் உரைக்கு முதலமைச்சருடைய பதில் உரை இருப்பதாலும் இன்று மாலை நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். நாளை முதலமைச்சருடைய துணைவியார் துர்கா ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைக்கிறார். திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் தோழமைக்கட்சி தலைவர்களும் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

 

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi