சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படுவதற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்படவுள்ளது. நாளை முதல் நியாய விலைக் கடைகள் மூலம் டோக்கன் விநியோகிக்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், நேரத்தில் ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்கள், ரூ.1000 ரொக்கம் பெறலாம். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்புடன் ரூ.1,000 பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படும். 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு ரூ.1,000 இல்லை.