சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று காலை 10 மணிக்கு பொங்கல் பரிசை மக்களுக்கு முதல்வர் வழங்குகிறார். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கம் ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் 13ம் தேதி வரை
பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. 13ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறாதவர்கள் 14ம் தேதியும் பொங்கல் பரிசை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.