கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோணவாய்க்கால் பகுதியில் உரிய அனுமதியின்றி ஏராளமான வாகனங்களில் பிரச்சாரம் மேற்கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது. தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரில் பாஜக வேட்பாளர் உள்பட 10 பேர் மீது போத்தனூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.