டெல்லி: அரசியல் கட்சிகளின் அனுமதியற்ற விளம்பரங்களை உடனடியாக அகற்ற மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சுவரொட்டி, விளம்பரங்களை அகற்றுவது தொடர்பான அறிக்கையை நாளை மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் எனவும் சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் அனைத்தையும் 24 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.