அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: ஒடிசா ரயில் விபத்து மனித உள்ளங்களை உருக்கி, கசக்கி பிழிவதாக இருந்தது. தமிழகத்தில் விரைவில் அரசியல்ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். தமிழ்நாட்டின் அனுமதி, அங்கீகாரம் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டவே முடியாது. இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது. மைத்ரேயன் பாஜவில் இணைந்திருப்பது அவரது விருப்பம்’ என்றார்.