சென்னை: காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 13,000 கிலோ கஞ்சா முதலமைச்சர் முன்னிலையில் அழிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. செங்கல்பட்டு, சேலம், தஞ்சை, நெல்லை மண்டங்களில் 13,000 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. காவல்துறை சார்பில் ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.