பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வீடு முன்பு ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் தேஜஸ்வி யாதவ் வீடு முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியினரும் தேஜஸ்வி யாதவ் வீடு முன்பு குவிந்ததால் பதற்றம் நிலவி வருகிறது.