அகமதாபாத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் எப்படி அனைத்து திருடர்களுக்கும் மோடி என்ற குடும்ப பெயர் வந்தது? என்று பேசினார். இது தொடர்பாக பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், சூரத் நீதிமன்றம் கடந்த மாதம் 23ம் தேதி ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது எம்பி பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஆர்பி மொகேரா, அடுத்த விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் போது ராகுல் மீதான அவதூறு வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.