Thursday, May 16, 2024
Home » தாது மணல் நிறுவனத்திடமிருந்து பணம் வாங்கிய விவகாரம்; பினராயி விஜயன், அவரது மகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மனு

தாது மணல் நிறுவனத்திடமிருந்து பணம் வாங்கிய விவகாரம்; பினராயி விஜயன், அவரது மகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மனு

by Neethimaan

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த தாது மணல் நிறுவனத்திடமிருந்து பணம் வாங்கிய விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், மகள் வீணா மற்றும் கேரள அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு தனியார் தாது மணல் நிறுவனத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்த நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா நடத்தி வரும் சாப்ட்வேர் நிறுவனத்திடமிருந்து சேவை பெற்றதாக கூறி இந்த தாது மணல் நிறுவனம் மாதத்திற்கு ரூ5 லட்சம் என 3 வருடங்களுக்கு ரூ1.78 கோடி பணம் கொடுத்தது தெரியவந்தது.

ஆனால் அந்த சாப்ட்வேர் நிறுவனத்திடமிருந்து எந்த சேவையும் பெறவில்லை என வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்தது. சோதனையின்போது சிக்கிய ஒரு டைரியில் முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தாலா, முஸ்லிம் லீக் தலைவர் குஞ்ஞாலிக்குட்டி உள்பட சில அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பணம் கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தாது மணல் நிறுவனத்திடமிருந்து பணம் வாங்கியதாக ரமேஷ் சென்னித்தலாவும், குஞ்ஞாலிக்குட்டியும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும் செய்தனர்.

இந்நிலையில் தாது மணல் நிறுவனத்திடமிருந்து பணம் வாங்கிய கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கேரள லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு எர்ணாகுளத்தை சேர்ந்த கிரீஷ் பாபு என்பவர் ஒரு மனு கொடுத்துள்ளார். தன்னுடைய மனு மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

2 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi