கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை, உள்நாட்டு தொலைபேசி அழைப்புகளாக இணையதள இணைப்பு வாயிலாக சட்டப்புறம்பாக மாற்றி பல லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய புகாரில் ஓசூர் கே. சி. சி நகரை சேர்ந்த அருள் மற்றும் அவருக்கு உதவிய சரவணன் ஆகிய இருவரை கைது செய்த ஓசூர் நகர போலீசார் அவர்களிடமிருந்து பயன்படுத்தப்பட்ட இரண்டு, செல்போன்கள், கம்ப்யூட்டர் மற்றும் ரூட்டர்களை அவர்களிடம் பறிமுதல் செய்தனர். முக்கிய மூளையாக செயல்பட்ட ராஜீவ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.