சென்னை: மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் உத்தரவிட்டுள்ளார். அலுவல் பணிக்காக வரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாக நடந்துகொள்ளக் கூடாது எனவும் ஆணையர் தெரிவித்தார்.