ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் அரசு வட்டார பொது சுகாதார ஆய்வகம் ரூ.50 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில், எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெரியபாளையம் ஊராட்சியில் ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், தண்டுமாநகர், ராள்ளபாடி என 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டாலோ அல்லது பிரசவத்திற்கோ பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவேண்டும். இதனால் ரத்தம் பரிசோதனை செய்ய இங்கு புதிதாக வட்டார பொது சுகாதார ஆய்வகம் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இதன் பணிகள் முடிந்து 6 மாதம் ஆகிறது. இதுவரை இந்த ஆய்வகம் திறக்கவில்லை. எனவே, இந்த ஆய்வகத்தை திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.