பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். முதியவர் சோலைராஜா, இருசக்கர வாகனத்தில் சென்ற கரிகாலன் என்பவரிடம் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். மேல்புலியூர் நோக்கி சென்ற மினி பேருந்து, பைக் மீது மோதியதில் கரிகாலன் (45), சோலைராஜா (73) நிகழ்விடத்திலேயே பலியாகினர்.