பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பாலஸ்தீனியர்களுக்கு உதவ மேற்கு கரை அருகே உள்ள எல்லை தடுப்புகளை தகர்த்து நுழைய முற்படும் ஜோர்டானியர்களால் பரபரப்பு நிலவி வருகிறது. போராட்டத்தின்போது பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் ஜோர்டான் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.