Tuesday, May 14, 2024
Home » தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி மகன் உட்பட 38 பேர் குண்டாசில் கைது: காவல் துறை நடவடிக்கை

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி மகன் உட்பட 38 பேர் குண்டாசில் கைது: காவல் துறை நடவடிக்கை

by Ranjith

துரைப்பாக்கம்: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி தர்கா மோகனின் மகன் உட்பட 38 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் தொடர் கஞ்சா விற்பனை செய்த பிரபல ரவுடி தர்கா மோகனின் மகன் பிரதீப் (27), ஜோதிகணேஷ் (32), திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த சூர்யா (27), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தேவா (24), வண்ணாரப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சரத்குமார் (30),

புழல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சோழாவரம் பகுதியை சேர்ந்த பிரசாத் (30), புழல் பகுதியை சேர்ந்த ஆர்த்தி (22), விருகம்பாக்கம் பகுதியில் குட்கா விற்பனை செய்த சின்மயா நகரை சேர்ந்த உசேன் பாட்ஷா (31), ராயப்பேட்டை பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தொடர்புடைய கோபாலபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (39), அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த முகம்மது ரவி (23), ஆயிரம் விளக்கு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மனோஜ்குமார் (25),

தலைமை செயலக காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த திருச்சி ராம்கி நகரை சேர்ந்த தேவேந்திரன் (32), அரும்பாக்கம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அரும்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரன் (34), சுதாகர் (36), திருவேற்காடு பகுதியை சேர்ந்த சரவணன் (27), கோயம்பேடு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மேகசூர்யா (23), கொடுங்கையூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வியாசர்பாடியை சேர்ந்த கலைசெல்வன் (எ) அப்பு (34),

ஆர்.கே.நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த தண்டையார்பேட்டையை சேர்ந்த ரமேஷ் (24), ஆள்மாறாட்டம் மூலம் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்த வழக்கில் தொடர்புடைய மாதவரம் பகுதியை சேர்ந்த சகாதேவன் (48), ஜவஹர் நகரை சேர்ந்த குமார் (42), போலி ஆவணங்கள் மூலம் ரூ.3.5 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் அண்ணாநகரை சேர்ந்த சசிகுமார் (52), பெரியமேடு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பெரியமேடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (30), எழும்பூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த வினோத் (22),

திருவொற்றியூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பொன்னேரியை சேர்ந்த முனுசாமி (31), தண்டையார்பேட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அதிகேசவன் (38), மதன் (49), கொடுங்கையூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சி பகுதியை சேர்ந்த மாதவன் (30), வியாசர்பாடியை சேர்ந்த சையது முஸ்ரப் (23) உள்ளிட்ட 38 பேர், போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

You may also like

Leave a Comment

six − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi