Sunday, May 12, 2024
Home » மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய், நாங்க மணிப்பூரில் இருந்தப்போ கூட துப்பாக்கி சூடு நடந்தது: கனிமொழி எம்பி பேட்டி!

மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய், நாங்க மணிப்பூரில் இருந்தப்போ கூட துப்பாக்கி சூடு நடந்தது: கனிமொழி எம்பி பேட்டி!

by Francis

டெல்லி: மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய், நாங்க மணிப்பூரில் இருந்தப்போ கூட துப்பாக்கி சூடு நடந்தது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் மெய்தி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர். இதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 3-ம் தேதி பேரணி நடத்தினர்.

அந்த பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, மணிப்பூர் மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் 2 நாள் பயணமாக அம்மாநிலத்திற்கு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று காலை அம்மாநில ஆளுநர் அனுஷ்யா உக்கியை சந்தித்து அமைதியை நிலைநாட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

மணிப்பூர் சென்றுவிட்டு டெல்லி திரும்பிய திமுக எம்பி கனிமொழி, “மணிப்பூரில் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் மக்கள் மீது ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை காணமுடிகிறது. மணிப்பூரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 2 பெண்களையும் சந்தித்தோம். அப்பெண்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினரே அவர்களை வன்முறை கும்பலிடம் ஒப்படைத்ததாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மணிப்பூரில் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்த உள்ளோம். மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய், நாங்க மணிப்பூரில் இருந்தப்போ கூட துப்பாக்கி சூடு நடந்தது. மணிப்பூர் மாநில பாஜக அரசு மீது அம்மாநில மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். வன்முறைக்கு பொறுப்பேற்று மணிப்பூர் முதல்வர் பதவி விலகவேண்டும். பாதுகாப்பு கோரி மணிப்பூர் மக்கள் இன்றும் போராடி வருகின்றனர். மணிப்பூரில் உள்ள முகாம்களில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

two × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi