தூத்துக்குடி: தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளார். மதுரைக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் சுமார் 3 மணி நேரமாக காத்துக்கிடப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர். திருச்செந்தூர் கோயிலில் மாசி திருவிழாவினால் மதுரை செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.