சென்னை: சாதாரண பயணிகள் ரயில்களில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில், சாதாரண பயணிகள் ரயிலில் விரைவு ரயில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெல்லை-அம்பை-தென்காசி செல்லும் பயணிகள் ரயிலில் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.10- ஆக குறைக்கப்பட்டுள்ளது.