டெல்லி: நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்திய பட்டதாரி இளைஞர்களின் வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மைசூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் வீட்டில் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. ஹரியானா மாநிலம் ஹிஸாரியில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தவர் நீலம். மேற்படிப்பு படித்துள்ள நீலம், ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்திலும் பங்கேற்றவர் என உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தனர்.