சென்னை: மெட்ரோ ரயில்களில் பயணிக்காமல் பார்க்கிங் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்ததால் மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை. திருவொற்றியூர், தேரடி, வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, மண்ணடி, காலடிப்பேட்டை, உயர்நீதிமன்றம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, நந்தனம், கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர், மீனம்பாக்கம், விமான நிலையம், அசோக்நகரில் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் கட்டணம் உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.