சென்னை: பரந்தூர் விமான நிலைய தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கையை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) வெளியிட்டது. 4 கட்டங்களாக அமைகிறது பரந்தூர் விமான நிலையம். இதற்கு மொத்தம் ரூ.32,704 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டில் தொடங்கும் இப்பணிகள் 2029ம் ஆண்டில் நிறைவடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.