கடலூர்: பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் சாமி வீதியுலா நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் கோகுலகிருஷ்ணன் (18) உயிர்ந்துள்ளார்
மேலும் 10க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர். காயம்பட்ட அனைவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்