சென்னை :பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் மகன், மருமகளுக்கு ஜாமின் வழங்குவது குறித்து சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் சரணடையும் நாளில் ஜாமின் வழங்குவது குறித்து சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 18 வயது பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.