திருப்பூர்: பல்லடம் கொசவம்பாளையம் அருகே லாரி ஓட்டுநரிடம் போலி துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்களது காரை, லாரி உரசுவது போல வந்ததால், லாரியை விரட்டிச் சென்று நிறுத்தி ஓட்டுநரை மிரட்டியுள்ளனர். கோவையைச் சேர்ந்த பரணிதரன், அபிஷேக் குமாரை கைது செய்து டம்மி துப்பாக்கி மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்துள்ளனர்.