கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு முதல்போக பாசனத்திற்காக 07.06.2023 முதல் 15.10.2023 முடிய தொடர்ந்து 130 நாட்களுக்கு ஆழியாறு அணையிலிருந்து 1205 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், ஆணை மலை வட்டத்திலுள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.