ஆந்திரா: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.215 கோடி ஆந்திர அரசு ஒதுக்கியுள்ளது. குப்பம் தொகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படவுள்ளது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் தமிழகம் பாதிக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.