மதுரை: பழனி கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பசுக்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிட்டுள்ளது. பழனி காசோலையில் முறைகேடு நடப்பதாகவும் பசுக்களின் நிலை என்ன என்பது பற்றியும் ஆய்வு செய்யக் கோரிய மனு தொடரப்பட்டது. மாடுகளின் நிலை குறித்து அறிய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.