நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டியில் தண்ணீர் தொட்டியில் மர்மநபர்கள் பூச்சி மருந்து கலந்தனர். வீட்டு உபயோகம், குடிநீருக்காக பயன்படுத்தப்படும் 60,000 கொள்ளளவு கொண்ட தொட்டியில் பூச்சிமருந்து கலக்கப்பட்டது. தொட்டியில் இருந்து மருந்து கலந்துள்ள தண்ணீரை ஆய்வுக்காக சுகாதாரத்துறையினர் எடுத்துச் சென்றனர்.