திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதம் நேற்று தொடங்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசைக் கண்டித்து எழுதப்பட்ட பேனர்களுடன் சபைக்கு வந்திருந்தனர். அதில், கடந்த 5 மாதங்களாக முதியோர் மற்றும் நலிவடைந்தோருக்கான ஓய்வூதியம் வழங்கப்படாததைக் கண்டித்து வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவர்கள் சபாநாயகரின் இருக்கை அக்கு அருகே சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த பிரச்னை குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.