டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆலோசனை தொடங்கியது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆராய உள்ளது. அமித்ஷா, குலாம் நபி ஆசாத், என்.கே.சிங், சுபாஷ் காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோத்தாரி, அர்ஜுன்ராம் மேக்வால் பங்கேற்றுள்ளனர்.