Friday, May 10, 2024
Home » ஒகேனக்கல் ஆற்றுக்கு நீரவரத்து 6,000 கனஅடியாக சரிவு: பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் அனுமதி

ஒகேனக்கல் ஆற்றுக்கு நீரவரத்து 6,000 கனஅடியாக சரிவு: பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் அனுமதி

by Nithya

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக குறைந்ததால் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் மாவட்டம் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக மாநிலம் கபினி அணை மற்றும் கே.எஸ்.ஆர். அணையில் இருந்து தமிழகத்திற்கு 2 தினங்களுக்கு முன்பு 20,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அதை அடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதித்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 15,000 கனஅடியாகவும், இன்று காலை 6,000 கனஅடியாகவும் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளின் நலனை கருதி பரிசல் சவாரி செய்யவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இதனால் இன்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. அவர்கள் பரிசல் சவாரி செய்தும், அருவியில் குளித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

seven − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi