சென்னை: தீவிரவாத வழக்குகளில் புழல் சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட கைதிகள் நாசவேலை செய்ய சதி திட்டமா? சிறையில் இருந்தபடியே வெளியே உள்ள கூட்டாளிகளுடன் செல்போன் மூலம் பேசுவதை போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். புழல் சிறையில் இருந்த கைதி சரவணன் வெளியே வந்து வேறொரு வழக்கில் கைதான நிலையில் விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.