திருமலை: தெலங்கானா மாநிலம், சிரிசில்லா பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவர், திருப்பதி ஏழுமலையானுக்கும், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கும் தீப்பெட்டியில் அடங்கும் விதமாக தங்க புடவைகளை நேற்று காணிக்கையாக வழங்கினார். ஏழுமலையானுக்கு தீப்பெட்டியில் அடங்கும் வகையில் ரூ. 45 ஆயிரம் மதிப்பிலான தங்க சேலையும், பத்மாவதி தாயாருக்கும் தீப்பெட்டியில் பொருத்தும் வகையில் 5 கிராம் தங்க ஜரிகை புடவை கொடுத்தார்.