டெல்லி : ஒடிசா ரயில் விபத்து காரணமாக நாடு முழுவதும் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும், இன்று ரத்து செய்யப்படுவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். கோவா மாநிலத்தில் இன்று துவக்கப்பட இருந்த வந்தே பாரத் ரயில் திட்ட அறிமுக நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவங்கி வைக்க இருந்தார். ஆனால் ஒடிசா மாநில ரயில் விபத்து காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.