புதுடெல்லி: பாலசோர் ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், மின்னணு இன்டர்லாக் அமைப்பில் வேண்டுமென்றே மாற்றம் செய்யப்பட்டு விபத்து நடந்ததாக ரயில்வே உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். அதனை உறுதி செய்ய சிபிஐ விவசாரணை மேற்கொண்டுள்ளது. மாலையில், சிபிஐ குழு விசாரணையைத் தொடங்க விபத்து நடந்த இடத்தை சென்றடைந்தது.