புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 2ம் தேதி பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 288 ஆக இருந்தது. இந்நிலையில், முதுகு தண்டுவடம் உள்பட பல காயங்களுடன் பிஜய் பஸ்வான் என்பவர் கட்டாக் மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி சேர்க்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இதனால் ஒடிசா ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 289 ஆக உயர்ந்துள்ளது.