ஒடிசா: ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த பாலாசோர் பகுதியை ஹவுரா-புரி வந்தே பாரத் ரயில் கடந்து சென்றுள்ளது. கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில் ஒன்றன் மீது ஒன்று மோதியதில் 275 பேர் உயிரிழந்தனர். பயங்கர விபத்தை அடுத்து மீட்பு பணிகள் முடிவடைந்து ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மெயின் ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்ட நிலையில் சோதனை முறையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டன.