டெல்லி: வன்னியர் சங்க கட்டடத்துக்கு தமிழ்நாடு அரசு சீல் வைத்த விவகாரத்தில் வன்னியர் சங்கத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. பரங்கிமலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை தற்காலிகமாக பயன்படுத்த காசி விஸ்வநாதர் தேவஸ்தானத்துக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. தேவஸ்தானத்துக்கு தற்காலிகமாக தந்த இடத்தை வன்னியர் சங்க கட்டடம் கட்டப்பட்டு அலுவலகமாக செயல்பட்டு வந்தது. நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகளுக்கு பல்லாவரம் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி சீல் வைக்கப்பட்டது.