உத்திரமேரூர்: உத்திரமேரூரில் எண்டத்தூர் சாலையில் நூக்காலம்மன் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இக்கோயில் புனரமைப்பு மற்றும் கோபுரம் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதனால், கோயிலில் பாலாலயம் செய்ய பக்தர்களால் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில், நூக்காலம்மன் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
நூக்காலம்மன் கோயிலில் பாலாலயம்
previous post