சென்னை: என்.எல்.சி. விரிவாக்கப் பணி விவகாரம் தொடர்பான வழக்கை இன்று மதியம் சென்னை ஐகோர்ட் விசாரணை மேற்கொள்கிறது. அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு தொல்லை தரக் கூடாது என முருகன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்துள்ளார். முருகனின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலு நீதிபதி முன் முறையீடு செய்துள்ளார்.